ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டு – நீர்கொழும்பு துணை மேயர் அதிரடியாக கைது!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நீர்கொழும்பு துணை மேயர் முகமது அன்சார் செயூர் ஃபரேஸ் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள்களாலும் மற்றொரு கூர்மையான பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு ஆதவன் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியது.
இதேவேளை நீர்கொழும்பு – தெல்வத்தை பகுதியில் நவீன துப்பாக்கியும், தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.