இராணுவ உடை அணிந்தவர்களால் 5 இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் – எச்சரிக்கை!
In இலங்கை April 29, 2019 1:18 pm GMT 0 Comments 4351 by : Jeyachandran Vithushan

இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாக அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு (MSD) தெரிவித்தாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இராணுவ உடை அணிந்தவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் பாதுகாப்புதுறை அதிகாரியிடம் அனைத்து பாதுகாப்பு தலைவர்களுக்குமான கடிதம் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தகவலில்,
“இலங்கையில் 5 இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் சத்தியம் உள்ளது. அந்த 5 இடங்களில் மட்டக்களப்பும் உள்ளடங்கியுள்ளது. மேலும் 4 இடங்கள் தொடர்பாக அறிவிக்கப்படவில்லை. மேலும் இதில் அதிக சனத்தொகை காணப்படும் இடங்கள் இலக்காக வைக்கப்படலாம்.
அத்தோடு இதை மேற்கொள்பவர்கள் இராணுவ உடை அணிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும்” அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலையடுத்து தலைநகர் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முப்படை விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சரவதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.