ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு!

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு புயலின் போது உயிரிழப்புக்களை குறைத்தமைக்காக இந்தியாவுக்கு ஐ.நா. பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் குறைப்பு முகாமையகம் இந்த பாராட்டினைத் தெரிவித்துள்ளது.
சென்னை அருகே வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் தீவிர புயலாக மாறி ஒடிசா நோக்கி சென்றது. ஒடிசா மாநிலத்தின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று ஃபானி புயல் கரையைக் கடந்தது. இதனால், புரி, புவனேஷ்வர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த புயல் பெருமளவான உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் என்ற அச்ச நிலையில், மாநில அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அதிக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இதையடுத்தே, பேரிடரின் போது சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஐ.நா.விடமிருந்து இந்த பாராட்டு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா