அசுர வேட்டை குறித்த முக்கிய அறிவிப்பு!
In சினிமா April 30, 2019 4:19 am GMT 0 Comments 1873 by : adminsrilanka

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘அசுரன்’ திரைப்படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் ‘அசுர வேட்டை’ விரைவில் என அறிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ளதுடன் டீசர் உள்ளிட்ட புரமோஷன் திகதிகளையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் தனுஷ் சமீபத்தில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தனுஷ் 34’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சினேகா நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ‘அசுரன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கியுள்ளதாகவும் இது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு என்றும் தனுஷ் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat,
-
பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனா
-
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களி
-
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனா
-
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்
-
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீ
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்
-
நாட்டின் 72ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோ
-
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்