அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் ஒவ்வொரு 33 வினாடிகளுக்கும் ஒருவர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் ஒவ்வொரு 33 வினாடிகளுக்கும் ஒருவர் கொரோனா வைரஸால் உயிரிழப்பதாக அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இது முந்தைய வாரத்தை விட 6.7 சதவீத அதிகமாகும். மொத்தமுள்ள 50 மகாணங்களில் 31 மகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சாதமான முடிவுகள் 10 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளது.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பினை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்காவே விளங்குகின்றது.
இதுவரை அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால், ஒரு கோடியே 84இலட்சத்து 73ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று இலட்சத்து 26ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அங்கு மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.