அம்பாறை- பொத்துவில்லில் நிலநடுக்கம்
In இலங்கை February 19, 2021 9:59 am GMT 0 Comments 1249 by : Yuganthini

அம்பாறை- பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பொத்துவில்- சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நிலநடுக்கத்தினை எம்மாலும் உணரக்கூடியதாக இருந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.