அரசின் வாக்குறுதிகளை சட்டமாக இயற்றுமாறு விவசாயிகள் கோரிக்கை!
In இந்தியா December 24, 2020 6:37 am GMT 0 Comments 1461 by : Krushnamoorthy Dushanthini

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்த போதும் அடிப்படை ஆதார விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை சட்டமாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசிய விவசாயத் தலைவர்கள் மேற்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளதுடன், தேவையற்ற சீர்திருத்தங்களை ஏற்க மாட்டோம் என்றும் கூறி அரசின் சமாதான முயற்சியை நிராகரித்துள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் சட்டங்களில் விவசாயிகள் எது வேண்டும் எது வேண்டாம் என்பதைத் தெளிவுபடுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.