அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினராக மீண்டும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவு
In இலங்கை April 6, 2019 5:47 am GMT 0 Comments 2791 by : Dhackshala
அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபையின் தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அரசியலமைப்பு சபையின் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையிலிருந்து சமல் ராஜபக்ஷ விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இரா.சம்பந்தன் அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நேரடியாக தெரிவாகியிருந்தார். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதையடுத்து, இரா.சம்பந்தன் அந்த பதவியை இழக்க நேரிட்டது.
இந்த நிலையிலேயே அவர் மீண்டும், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ