அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி நாட்டிற்கான பணியாற்றத் தயார் – ஐக்கிய தேசியக் கட்சி
In இலங்கை February 17, 2021 9:46 am GMT 0 Comments 1256 by : Jeyachandran Vithushan

அரசியல் வேறுபாடுகளை களைந்து நாட்டின் நலனுக்காக செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அரசியல் கூட்டணியை அமைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் ருவான் விஜேவர்தன கூறினார்.
தற்போது நாடு ஆபத்தான நிலையில் இருப்பதால், அரசியல் நடவடிக்கைக்கு பதிலாக நாட்டை கட்டியெழுப்புவது குறித்து கட்சி கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.