அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தவில்லை – கமால் குணரத்ன
In இலங்கை January 5, 2021 8:19 am GMT 0 Comments 1433 by : Jeyachandran Vithushan

சாரதி அனுமதிப் பத்திரத்தை இராணுவத்தினர் அச்சடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை தாற்காலிமானது என்றும் இது அரச நிதியை சேமிப்பதற்கான நடவடிக்கை என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அரச நிறுவனங்களை இராணுவம் கையகப்படுத்தவில்லை என கூறினார்.
மேலும் மோட்டார் போக்குவரத்துத் துறையின் மற்ற நடவடிக்கையில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என்றும் இராணுவம் அச்சிடும் பணியில் மட்டுமே ஈடுபடுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனவே அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட ஒரு நிரந்தரமான முயற்சி இது அல்ல என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.