அல்பேர்ட்டாவின் 18 ஆவது முதல்வராக ஜேசன் கென்னே பதவியேற்பு!
In கனடா May 2, 2019 6:49 am GMT 0 Comments 2449 by : Jeyachandran Vithushan

அல்பேர்ட்டா மாநில தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, பழமைவாதக் கட்சியின் தலைவர் ஜேசன் கென்னே உத்தியோகபூர்வமாக மாநிலத்தின் 18 ஆவது முதல்வராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன் தனது அமைச்சரவையையும் அமைத்துள்ள அவர், பட்டையக் கணக்காளராக இருந்த ட்ராவிஸ் டோவ்ஸ்-ஐ நிதிஅமைச்சராகவும், கல்கரி வழக்கறிஞர் டக் சூவிச்சரை சட்டஅமைச்சராகவும் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற மாநிலத்தேர்தலில், முன்னர் ஆட்சியில் இருந்த புதிய ஜனநாயகக் கட்சியைத் தோற்கடித்த ஐக்கிய பழமைவாதக் கட்சி, 63 ஆசனங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது புதியஆட்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து, முன்னாள் முதல்வர் றேச்செல் நோட்லி எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவதற்கு உறுதியளித்துள்ளார்.
தற்போது அமைக்கப்பட்டுள்ள மாநிலஅரசின் சட்டமன்றம், இந்த மாதத்தின் பிற்பகுதியில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ