ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து வெடிப்புச் சம்பவங்கள் – மூவர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜலலாபத் நகரில் இன்று (சனிக்கிழமை) இந்த வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக அரசாங்கத்தின் பேச்சாளர் அதாவுல்லா கோகியானி குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் 8 பாதுகாப்புப் படையினரும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெடிப்பு குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அத்தோடு, எந்த அமைப்பும் உரிமையும் கோரவில்லை.
ஆப்கானிஸ்தானில் செயற்படும் ஐ.எஸ். அமைப்பு, அங்கு இடம்பெற்ற பல முக்கிய தாக்குதல்களுக்கு காரணமாக அமைந்தது. ஆப்கானிஸ்தானின் ஆபத்துமிக்க ஆயுதக்குழுவாக அது பெயரிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை ஒருபுறம் இடம்பெறும் அதேவேளை, ஆயுதக்குழுக்களுக்கும் தலிபான் மற்றும் ஆப்கான் படைகளுக்கிடையிலான சண்டை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்