ஆறு இலட்சம் டோஸ் மொடர்னா தடுப்பு தடுப்பூசியை கொள்வனவு செய்யும் ஸ்பெயின்!

அமெரிக்க நிறுவனத்தின் ஆறு இலட்சம் டோஸ் மொடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியை கொள்வனவு செய்ய, ஸ்பெயின் தீர்மானித்துள்ளது.
இந்த மொடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசிகள், அடுத்த ஆறு வாரத்தில் வந்தடையும் என ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சர் சால்வேடார் தெரிவித்துள்ளார்.
அதுவரையில் மக்கள் பொதுவான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கு தடுப்பு மருந்தை விரைவாகக் கொண்டு வரும் பணியில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருகின்றது.
மொடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி நல்ல பலன் அளிப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளதால் அந்த தடுப்பூசி அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 27 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியம், மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.