இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதி!
In விளையாட்டு January 4, 2021 1:45 pm GMT 0 Comments 1752 by : Jeyachandran Vithushan

டெஸ்ட் தொடருக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் அவர் மேலும் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றுமொரு சகலதுறை வீரரான கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் செய்திருந்தது.
இந்நிலையில் கடும் சுகாதார நெறிமுறைகளுக்கு பின்னர் எதிர்வரும் 14 ஆம் திகதி முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.