இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் 90ஆயிரத்து 241பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 25இலட்சத்து 97ஆயிரத்து 446பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 13ஆயிரத்து 659பேர் பாதிக்கப்பட்டதோடு 421பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 30ஆயிரத்து 277பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 151 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 76ஆயிரத்து 928பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.