இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 11.85 கோடியை கடந்தது
In இந்தியா November 9, 2020 9:47 am GMT 0 Comments 1429 by : Yuganthini

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 11.85 கோடியை கடந்துள்ளதென இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம், 8.35 இலட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் மருத்துவ ஆராய்ச்சி சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 85.53 இலட்சமாக உயர்ந்துள்ளது. 79.17 இலட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 5.09 இலட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 92.56 சதவீதமாகவும் உள்ளது.
மேலும், கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவான பரிசோதனைகள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.