இந்தியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: ரூட் சதம்- வலுவான நிலையில் இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில், ஜோ ரூட் 128 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.
சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், ரொறி பர்ன்ஸ் 33 ஓட்டங்களுடனும் டேனியல் லோரன்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த டோமினிக் சிப்ளி 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை, இங்கிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.