இந்தியா, சீனா எல்லைப் பிரச்சினை : அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது பாதுகாப்பு சட்டமூலம்!
In இந்தியா December 17, 2020 8:29 am GMT 0 Comments 1550 by : Krushnamoorthy Dushanthini

இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றி குறிப்பிடும் அமெரிக்காவின் பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்திற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டும் இந்த தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.
இந்த சட்டமூலத்தில் மற்ற அம்சங்களுடன், லடாக் எல்லையில் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க காங்கிரஸ் சார்ந்தவரான ராஜா கிருஷ்ணமூர்த்தியின் தீர்மானமும் அடங்கி உள்ளது. அதில் அவர் சீனா இந்தியாவுக்கு எதிராக இராணுவ ஆக்கிரமிப்பை லடாக் எல்லையில் மேற்கொண்டு வருவதை குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சட்டத்தில் கையொப்பமிடுவதன் மூலம் சீனாவின் இந்தியா மீதான இராணுவ ஆக்கிரமிப்புகள் பொறுத்துக் கொள்ளப்படாது என்ற தெளிவான செய்தியை அமெரிக்க அரசு அனுப்பும் என கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.