இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு
In இலங்கை January 6, 2021 3:44 am GMT 0 Comments 1327 by : Dhackshala

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் எஸ். ஜெய்சங்கர் இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது உயர்மட்ட பரிமாற்றங்கள் மூலம் இரு தரப்பினரும் பல துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளனர்.
இதேவேளை, அவர் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவையும் சந்திக்கவிருப்பதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாளையதினம் காலை 9.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் கீழ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ விஜயம் 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகரின் முதல் வருகையை குறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.