
UPDATE : பிரமாண்டமாக ஆரம்பமாகிறது லைக்காவின் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
குறித்த விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடைபெறவுள்ளது.
இந்த திரைப்படத்தின் ‘சும்மா கிழி’ என்ற ஃபெர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் அண்மையில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், யூடியூபில் அதிக பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.
சமீபத்தில் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளதுடன் #DarbarAudioLaunch என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் ருவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
‘சும்மா கிழி’ பாடலை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளதுடன், இந்த பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியுள்ளார்.
அத்துடன் அனிருத் மற்றும் எஸ்.பி பாலசுப்ரமணியம் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.
‘பேட்ட’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதேவேளை ‘பேட்ட’ திரைப்படத்திற்கு பின் மீண்டும் அனிருத் ‘தர்பார்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். தளபதி திரைப்படத்திற்கு பின் மீண்டும் சந்தோஷ் சிவன் இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளாராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த திரைப்படம் எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு “சும்மா கிழி கிழி” என திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரமாண்டமான ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழா அறிவிப்பு
லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், இப்படத்தின் இசை இம் மாதம் 7 ஆம் திகதி நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணி முதல் பிரமாண்டமாய் நடைபெறவுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
‘சும்மா கிழி’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில் தீம் மியூசிக்குடன் கூடிய தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து ‘தர்பார்’ அசத்தல் இசையில் இருந்து முதல் சிங்கிள் டிராக்கான ‘சும்மா கிழி’ பாடல்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இப்பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
‘பேட்ட’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.
இவர்களுடன் யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘பேட்ட’ திரைப்படத்திற்கு பின் மீண்டும் அனிருத் ‘தர்பார்’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். தளபதி திரைப்படத்திற்கு பின் மீண்டும் சந்தோஷ் சிவன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளாராகியுள்ளார்.
இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு சும்மா கிழி கிழி என திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
UPDATE : ‘தர்பார்’ – லைக்கா புரொடக்ஷன்ஸுடன் மீண்டும் இணைகிறார் சுப்பர்ஸ்டார்!
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் முதல்பார்வை (First look) சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினால் காலை 8.30 மணிக்கு இந்த முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ரஜினியுடன் இணைந்து நயன்தாரா சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட வெற்றிப்படமான 2.0 வைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் ‘தர்பார்’ இல் இணைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ளது ரஜினிகாந்த் 167 படத்தின் முதல் பார்வை!
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் முதல் பார்வை இன்னும் சற்றுநேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
2.0 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் மீண்டும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ள படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வருகின்றார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக ரஜினியுடன் இணைந்து நயன்தாரா சந்திரமுகி, சிவாஜி மற்றும் குசேலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து தலைவர் 167 படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு தீவிரமடைந்துள்ளது. இதற்காக ரஜினியை வைத்து போட்டோஷூட் செய்யப்பட்டுள்ளது. அதன் சில ஒளிப்படங்கள் இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்னர் கசிந்தன.
இந்நிலையில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 8.30 மணிக்கு தலைவர் 167 படத்தின் முதல் பார்வை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக பட தயாரிப்பாளரான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.