இன ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லை – நஸீர்
In இலங்கை April 9, 2019 5:43 am GMT 0 Comments 1961 by : Dhackshala
இன ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கம் இல்லையென கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் குறிப்பிட்டுள்ளார்.
சம்மாந்துறை தனியார் நிலையம் ஒன்றில் கல்முனையில் இயங்கி வரும் பிரதேச செயலகம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எமது ஊடக மாநாட்டை கல்முனையில் நடத்துவதற்கு பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.
கல்முனையில் வடக்கு பிரதேச செயலகம் என்ற ஒன்று இல்லை. ஆனால் அதனை தெளிவுபடுத்துவதற்கு முயன்றேனே அன்றி இனங்களுக்கு இடையில் இன நல்லுறவை பாதிக்கும் வகையில் செயற்படவில்லை.
எதிர்காலத்தில் கல்முனை பகுதியில் இன நல்லுறவை பாதிக்கும் வகையில் இவ்வாறான பிரித்தாளும் நிலைமையினை ஏற்படுத்தக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழவே இந்ந மாநாட்டை கூட்டி வலியுறுத்தவே முயன்றேன்.
அத்துடன் இங்குள்ள பௌத்த மதகுரு ஒருவரே தமிழ் முஸ்லிம் மக்களை பிரிக்கும் முயற்சியில் முன்னின்று செயற்படுகிறார். அவரே சில தமிழ் சகோதரர்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். ஆனால் நாங்கள் சமூகத்தை ஐக்கியப்படுத்தவே பாடுபடுகின்றோம்.
எனவே இந்த பிரதேச செயலக விடயத்தில் ஒற்றுமையுடன் தமிழ் பேசும் மக்களாக தொடர்ந்து செயற்படுவோம்” என குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங
-
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப
-
பாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர
-
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள
-
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம
-
நாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத
-
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங
-
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 30ஆயி
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.