இரும்புக்கம்பி தொழிற்சாலையிலிருந்து அதிர்ச்சி தரும் பொருட்கள் மீட்பு – இருவர் கைது!
In இலங்கை May 4, 2019 2:22 am GMT 0 Comments 2408 by : Dhackshala

ஜாஎல – ஏக்கல பிரதேசத்திலுள்ள தனியார் இரும்புக்கம்பி தொழிற்சாலையொன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சுமார் 800 பீரங்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், ரி – 56 ரக துப்பாக்கிக்கான நூற்றுக்கும் அதிகமான ரவைகளும் வெடி மருந்துகளுக்கு சமமான வெடிப்பொருட்கள் தொகையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி தொழிற்சாலையில் பல சந்தர்ப்பங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அதன் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
சம்பவம் தொடர்பில் குறித்த தொழிற்சாலையின் பொது முகாமையாளர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்