இலங்கைக்கு வருமாறு தென் கொரியாவின் பிரதமருக்கு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு
In இலங்கை October 20, 2020 12:10 pm GMT 0 Comments 1798 by : Jeyachandran Vithushan

தென் கொரியாவின் பிரதமர் சுங் சை-கியூனை இலங்கைக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற தொலைபேசி மூலமான கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் மேம்படுத்துவதற்கான விருப்பத்தை இரு தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் முடிவடைந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தென் கொரியாவின் பிரதமர் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பேச்சுவார்த்தையின் போது முதலீடு மற்றும் சுற்றுலா ஆகியவை தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதாக பிரதமரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபின், பிரதமர் சுங் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது
-
நாட்டில் மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற
-
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்
-
வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்
-
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா
-
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக
-
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி
-
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத
-
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா