இலங்கையில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை – மேலும் நால்வர் உயிரிழப்பு
In ஆசிரியர் தெரிவு January 13, 2021 2:08 am GMT 0 Comments 1407 by : Dhackshala

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவரும் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஆணொருவரும் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவரும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவரும் கொரோனா தொற்றுக்காரணமாக இறந்துள்ளதாக பதிவாகியுள்ளன.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 244ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 588 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இதனையடுத்து நாட்டில் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 537 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 42 ஆயிரத்து 621 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு, 6 ஆயிரத்து 672 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் 793 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியின் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப