இலங்கை குண்டுத்தாக்குதலுக்கு பாப்பரசர் கண்டனம்
இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
வத்திக்கானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிர்த்த ஞாயிறு திருப்பலியை ஒப்புக்கொடுத்து உரையாற்றியபோதே பாப்பரசர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் வேதனையையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பரிசுத்த பாப்பரசர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு பண்டிகையை கொண்டாட ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டபோது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டமை வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை கொடூரமான வன்முறை என விமர்சித்துள்ள பாப்பரசர், உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, எங்கிலிக்கன் திருச்சபையின் கென்டர்பெரி பேராயர் ஜஸ்டீன் வெல்பையும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கை திருநாட்டிற்காக தொடர்ந்தும் பிரார்த்திப்பதாகவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா
-
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக
-
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதியை ஐ.பி.எல். நிர்வாக
-
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறித்த அவுஸ்ரேலிய சிந்தனைக் குழுவான லோவி இன்ஸ்டிடி
-
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
-
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜெகன் இயக்கத்தில் உருவான ‘எல்லாம் கடந்து ப
-
நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல்
-
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்க
-
ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந
-
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர