ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஐந்து இலட்சத்து ஆயிரத்து 733பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 18ஆவது நாடாக விளங்கும் ஈராக்கில், இதுவரை மொத்தமாக 11ஆயிரத்து 380பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 184பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 53பேர் உயிரிழந்தனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 58ஆயிரத்து 120பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 376பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை நான்கு இலட்சத்து 32ஆயிரத்து 233பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.