ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்!

ஈரானிய உயர்மட்ட அணுசக்தி விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே (Mohsen Fakhrizadeh) கொல்லப்பட்டுள்ளார் என ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான அப்சார்ட்டில் அவரது வாகனத்தில் வைத்து அவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் ஃபக்ரிசாதேவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதுடனர் தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஈரானிய விஞ்ஞானி பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பின் தலைவராக தற்போது பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர் மாநாடொன்றில் குறித்த ஈரான் விஞ்ஞானியின் பெயரை நினைவில் கொள்ளவேண்டும் என தெரிவித்திருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அத்துடன், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஈரானிய அணு விஞ்ஞானிகளைக் குறிவைத்து தொடர்ச்சியான கொலைகளை இஸ்ரேல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் கொலை குறித்தும் இஸ்ரேல் மீது சந்தேகம் எழுந்துள்ளதுடன் விஞ்ஞானியின் கொலை குறித்து கருத்துக்கூற இஸ்ரேல் மறுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்நிலையில், பதவியேற்
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா