உக்ரேன் ஜனாதிபதிக்கு இரண்டாவது முறையாக மேற்கொண்ட பரிசோதனையிலும் கொவிட்-19 தொற்று உறுதி!

உக்ரேனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு இரண்டாவது முறையாக மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 42 வயதான வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதனை, அவர் டெலகிராம் சமூக வலைத்தளத்தில் நேற்று உறுதி செய்தார்.
அதே நேரத்தில் அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனது பலம் திரும்பி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலினா, ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல வாரங்கள் மருத்துவமனையில் கழித்த நிலையில், அவருக்கு கடந்த 9ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.