உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு மைத்திரி ஆட்சியே முழுப்பொறுப்பு: முன்னாள் ஜனாதிபதி
In ஆசிரியர் தெரிவு April 30, 2019 4:21 am GMT 0 Comments 2826 by : Risha

இலங்கையில் அரங்கேறிய உயிர்த்த ஞாயிறுதின கொலைவெறி தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியே முழுப் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதியும், தேசிய நல்லிணக்கச் செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரி அரங்கேற்றிய சர்வாதிகார ஆட்சியால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டத்துறை பின்னடைவை சந்தித்ததாகவும், இதுவே ஐ.எஸ்.-இன் ஊடுருவலுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தான் நாட்டில் இல்லாத நேரம் இந்த தாக்குதல்கள் நடைபெற்றதால், ஏனைய அதிகாரிகளை பதவி விலகுங்கள் என்று கூறி ஜனாதிபதி தப்பிவிட முடியாது.
நாட்டின் அரசியல் நல்லிணக்கத்தை ஜனாதிபதி கடந்த ஒக்டோபர் மாதம் சிதைத்தார். தற்போது இன,மத நல்லிணக்கத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிதைத்துள்ளனர். இரக்க குணமற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த