உலகின் மிகப்பெரிய விமானம் பயணத்தை ஆரம்பித்தது

உலகின் மிகப்பெரிய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் வகையில், Stratolaunch எனும் நிறுவனத்தால் இந்த விமானம் உருவாக்கப்பட்டது.
அதாவது பூமியிலிருந்து 10 கிலோமீற்றர் (6.2 மைல்கள்) தூரத்திற்கு செயற்கை கோள்களை சுமந்துசெல்லும். பின்னர், அங்கிருந்து விண்வெளிக்கு அனுப்பப்படும்.
விமானத்தின் இறக்கையானது 385 அடி நீளம் (117 மீற்றர்) கொண்டது. அதாவது அமெரிக்க காற்பந்து திடலின் நீளத்திற்கு சமமானது. ஆறு இயந்திரங்களை கொண்டமைந்த இந்த விமானம் மணிக்கு 170 மைல்கள் பறக்கும் வல்லமை கொண்டது. முதலாவது பயணத்தில் 15,000 (47,572 மீற்றர்) அடிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி பறந்துள்ளது.
குறித்த விமானத்தின் பயணம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததென விமானி ஈவன் தோமஸ் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே கணிக்கப்பட்டதைப் போன்று விமானம் சிறப்பாக பறந்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.
பூமியிலிருந்து நேரடியாக செயற்கை கோள்களைப் செலுத்துவதைவிட, இந்த விமானத்தின் மூலம் குறைந்த செலவில் செயற்கை கோள்களை செலுத்தலாமென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்