ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 32 இலட்சத்து 24 ஆயிரத்து 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 23 ஆயிரத்து 337 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 485 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, ஜேர்மனியில் 22 இலட்சத்து 39 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 07 ஆயிரத்து 627 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 990 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று இத்தாலியில் 25 இலட்சத்து 70 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 09 ஆயிரத்து 660 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 499 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.