ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்தது தொழிற்கட்சி
In இங்கிலாந்து May 9, 2019 5:10 am GMT 0 Comments 2662 by : Risha
நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்குமாறு தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
அதன்படி ஐரோப்பிய ஒன்றிய சார்பு வாக்காளர்கள் மற்றும் பிரெக்ஸிற் ஆதரவாளர்களிடம் இன்று (வியாழக்கிழமை) அவர் இக்கோரிக்கையை முன்வைப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொன்சவேற்றிவ் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் முறையற்ற பிரெக்ஸிற் ஒப்பந்தம் அல்லது ஒப்பந்தமற்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கையை தவிர்ப்பதற்கு மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்துவதே ஒரே வழியென்றும் அவர் தனது நிலைப்பாட்டை மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆனால், தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால் தேர்தலில் பங்குபெற தேவையில்லை என பிரதமர் தெரேசா மே அறிவித்திருந்தார்.
ஆனால், எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில் சட்டபூர்வமாக தேர்தலில் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க