ஐ.எஸ்.இற்கு எதிராக கோரிக்கை விடுத்துள்ள முஸ்லிம் அமைப்புகள்
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் அமைப்புகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
நாட்டிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் பேரவை உள்ளிட்ட 12 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து விடுத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த செய்திக் குறிப்பில், “ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு சமூகத்தினதும் கொலையாகக் கருதுமளவிற்கு இஸ்லாம் மனித உயிருக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கடுமையான தீவிரவாத, இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான அமைப்பொன்றாகும். இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக செயற்படும் இந்த தீவிரவாத அமைப்புக்களோடு எவரேனும் தொடர்புகளை ஏற்படுத்துவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எவரொருவர் தீவிரவாதத்துடன் தொடர்புடையவராக இருந்தாலும் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம்” என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ