ஐ.பி.எல். தொடரில் இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை குறைக்க டிவில்லியர்ஸ் யோசனை!

ஐ.பி.எல். ரி-20 தொடரில் அணித்தலைவர்களுக்கு அபாரம் விதிக்கப்படுவதனை தவிர்க்கும் வகையிலான யோசனையொன்றை, பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் டி வில்லியர்ஸ் முன்வைத்துள்ளார்.
நடைபெற்றுவரும் ஐ.பி.எல். ரி-20 தொடரில், பெரும்பாலான போட்டிகள் நள்ளிரவில்தான் முடிவடைகிறது. போட்டியின்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என்றால் அந்த அணியின் தலைவருக்கு இந்திய மதிப்பில், 12 லட்சம் ரூபாய்க்கு அபராதமாக விதிக்கப்படுகிறது.
இந்த நடப்பு தொடரில் இதுவரை ரோஹித் சர்மா, ரஹானே, விராட் கோஹ்லி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அபராதத்திற்குப் பதிலாக, இன்னிங்ஸ் இடைவேளை நேரத்தை 10 நிமிடங்களாக குறைக்க ஏபி டி வில்லியர்ஸ் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
”ஐ.பி.எல். விதிமுறைப்படி அணி தவறு செய்தால், அதற்கு அணித்தலைவர் அபராதம் விதிக்க வேண்டிய நிலை உள்ளது. இது அவர்களை சற்று பாதிக்கிறது. இதனால் அபராதத்திற்குப் பதில் இன்னிங்ஸ் இடைவேளையை 20 நிமிடத்தில் இருந்து 10 நிமிடமாக குறைக்கலாம்” என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்