ஐ.பி.எல்: பரபரப்பான போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூர் அணி திரில் வெற்றி

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 39ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு ஓட்டத்தால் திரில் வெற்றிபெற்றுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ், முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக, பார்தீவ் பட்டேல் 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் தீபக் சஹார், ரவீந்திர ஜடேஜா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து, 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் சென்னை அணி 1 ஓட்டத்தால் தோல்வியை தழுவியது.
டோனி ஆட்டமிழக்காது 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டேல் ஸ்டெயின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக பெங்களூர் அணியின் வீரர் பார்தீவ் பட்டேல் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.