ஒன்ராறியோவில் இருவருக்கு புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று, ஒன்ராறியோவில் அடையாளங் காணப்பட்டுள்ளது.
டர்ஹாமில் உள்ள ஒரு தம்பதியினருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளதாக, மாகாணத்தின் சுகாதார முதன்மை மருத்துவ அதிகாரி பார்பரா யாஃப் தெரிவித்துள்ளார்.
இது ஒன்றாரியர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டியதன் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
மேலும், மாகாண அளவிலான பொதுமுடக்க நடவடிக்கைகள் உட்பட அனைத்து பொது சுகாதார ஆலோசனைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று யாஃப் கூறுகிறார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.