ஒன்ராறியோவில் 2020ஆம் ஆண்டு 355,000பேர் வேலைகளை இழந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயால் கடந்த ஆண்டு 355,000க்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்ததாக ஒன்ராறியோவின் நிதி கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
நிதி இழப்பீட்டு அதிகாரி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், வேலை இழப்புகள் பதிவின் மிகப் பெரிய வருடாந்திர சரிவைக் இது குறிக்கின்றது என்று கூறுகிறது.
வேலை இழப்புகளுக்கு மேலதிகமாக, 765,000க்கும் மேற்பட்ட ஒன்ராறியோவில் வசிப்பவர்கள் தொற்றுநோயால் குறைவான மணிநேரம் வேலை செய்ததாக அறிக்கை கூறுகிறது.
இளைஞர்களின் வேலையின்மை 22 சதவீதமாக உயர்ந்ததால், இளம் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோ- பீட்டர்பரோவில் 13.5 சதவீததும் மற்றும் விண்ட்சர் 10.9 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்தன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.