கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பில் மாத்திரம் 294 பேருக்கு கொரோனா உறுதி
In இலங்கை December 2, 2020 3:17 am GMT 0 Comments 1510 by : Dhackshala

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 545 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இவர்களில் அதிகமானோர் கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 294 பேரும் களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 130 பேரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 817 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனையடுத்து வைரஸ் தொற்றுக்கு உள்ளான 6 ஆயிரத்து 593 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.