கடனால் தத்தளிக்கும் ஜெட் எயார்வேய்ஸ் நிறுவனம் – இந்திய எண்ணை ஸ்தாபனம் திடீர் முடிவு

மிகப்பெரிய தொகைக்கு பணம் செலுத்தப்படாததால் ஜெட் ஏயார்வேய்ஸ் நிறுவனத்திற்கு பெற்றோல் வழங்குவதை நிறுத்துவதாக இந்திய எண்ணை ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
ஜெட் ஏயார்வேய்ஸ் விமானங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பெற்றோல் டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்த விமானங்களுக்கு வழங்காமல் நேற்று ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்திய எண்ணை ஸ்தாபனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குறைந்த கட்டண விமானங்களுடன் ஏற்பட்டுள்ள போட்டியினாலும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்தாலும் ஜெட் ஏயார்வேய்ஸ் நிறுவனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேல் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் விமான குத்தகைதாரர்களுக்கும் விமான விநியோகத்தர்களுக்கும் மற்றும் விமானிகளுக்கும் சம்பள நிலுவைத் தொகையை வைத்துள்ளது.
தற்போது அதன் விமானங்கள் 15க்கும் குறைவாகவே இயங்குகின்றன. தற்போது அவ்விமானங்கள் சர்வதேச வழிகளில் இயங்க வேண்டுமெனில் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் ஜெட் ஏயார்வேய்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் எங்களுக்குப் பணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் ஜெட் ஏயார்வேய்ஸூக்கு தொடர்ந்தும் பெற்றோல் வழங்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.