கடனைச் செலுத்த தேசிய வளங்களை அரசாங்கம் விற்பனை செய்கின்றது – ரில்வின் சில்வா
In இலங்கை January 19, 2021 9:10 am GMT 0 Comments 1414 by : Jeyachandran Vithushan

நாட்டின் கடனைச் செலுத்துவதற்காக அரசாங்கம் தேசிய வளங்களை விற்பனை செய்து வருகிறது என தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டு மட்டும் 5.8 பில்லியனை கடனை திருப்ப செலுத்த வேண்டியுள்ளது என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த கடனைத் செலுத்துவதற்காக எண்ணெய் குதங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பெறுமதிமிக்க வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
பொது ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த துறைமுகங்கள் ஒரு அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அப்படி என்றால் அரசாங்கம் ஏன் துறைமுகத்தை விற்க நடவடிக்கை எடுக்கின்றது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.