கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு!
In இங்கிலாந்து February 17, 2021 7:25 am GMT 0 Comments 1376 by : Benitlas

அந்தாட்டிக்கா கண்டத்தின் அருகில் கடலுக்கு அடியில் புதிய வகை உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரித்தானிய அந்தாட்டிக்கா ஆய்வுக் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்கடியில் ஆய்வு நடத்தினர்.
900 மீட்டர் ஆழத்தில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதன்போது இதுவரை பார்த்திராத சில வகை பூஞ்சைகளும், சிறிய புழுக்களும் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இந்த வகை உயிரினங்களும், பூஞ்சைகளும் தற்போதுதான் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.