கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்தார் அர்ஜுன
In இலங்கை January 27, 2021 1:13 pm GMT 0 Comments 1639 by : Jeyachandran Vithushan

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுத்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான முன்மொழிவை உருவாக்க கட்சி தவறிவிட்டது என குறிப்பிட்டு அர்ஜுன ரணதுங்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த துணைத் தலைவராக தான் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த பதவியை ஏற்க வேண்டாம் என தான் முடிவு செய்துள்ளதாக அர்ஜுன ரணதுங்க, ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.