கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 599 பேருக்கு கொரோனா உறுதி
In இலங்கை January 12, 2021 2:55 am GMT 0 Comments 1368 by : Dhackshala

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இதுவரை 599 கொரோனா நோயாளர்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பதிவாகியுள்ளதாக கம்பாஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகளின் மாவட்ட பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா தெரிவித்தார்.
நேற்று அடையாளம் காணப்பட்ட ஆறு நோயாளிகளும் இந்திய முதலீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தொழிற்சாலையிலும் கணினி உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் பணிபுரியும் ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐந்து கொரோனா நோயாளிகள் நேற்று சீதுவ சுகாதாரப் பிரிவிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.