கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்க நடவடிக்கை!
In இலங்கை November 16, 2020 5:49 am GMT 0 Comments 1348 by : Vithushagan
கட்டுநாயக்க சர்வதேச நிலையத்தில் பல அடுக்குகளைக் கொண்ட இரண்டாவது முனையத்தை நிர்மாணிக்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளன.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி கட்டுமாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக தொடக்கி வைப்பார். இந்த முனையத்தை நிர்மாணிக்க 107 பில்லியன் ரூபாவுக்கு மேலான தொகை செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்திற்கு ஜப்பான் முதலீடு செய்கிறது. இதனை மூன்றாண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.