கனடாவின் பொது மன்றத்தில் வரலாற்றில் முதல்முறையாக 100 பெண்கள்: ட்ரூடோ பெருமிதம்!

நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, கனடாவின் பொது மன்றத்தில் (ஹவுஸ் ஆப் காமன்ஸ்) இப்போது 100 பெண்கள் உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
மார்சி ஐன் மற்றும் யாரா சாக்ஸ் இருவரும் முறையாக பதவியேற்றதை உறுதிப்படுத்திய பின்னர், பிரதமர் இந்த மைல்கல்லை குறிபிட்டார்.
மொத்தத்தில், சபையில் 338 பேர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஆண்கள்.
ரொறன்ரோ சென்டர் தொகுதியைச் சேர்ந்த மார்சி ஐன் மற்றும் யோர்க் செண்டர் தொகுதியைச் சேர்ந்த் யாரா சாக்ஸ் ஆகியோர் சமீபத்தில் பதவியேற்ற இரண்டு ஒன்றாரியோ பெண்கள் நாடாளுன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.