கனேடியருக்கு அமெரிக்காவில் வாழ்நாள் சிறைத்தண்டனை!

பயங்கரவாதச் செயல் என குற்றஞ்சாட்டப்பட்ட கனேடியர் ஒருவருக்கு, அமெரிக்க நீதிமன்றம், வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டில் மொன்றியலுக்கு குடிபெயர்ந்த துனீசிய நாட்டவரான 51 வயது அமோர் ஃபௌதி என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் மொன்றியலில் இருந்து சுமார் 1,609 கிலோமீட்டர் தூரம் பயணித்து, மிச்சிக்கன் ஃபிளின்ட் விமான நிலையத்தில் இருந்த அதிகாரி ஒருவரின் கழுத்தில் கத்தியால் குத்தி தாக்குதல் நடாத்தியிருந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து, தற்போது அவருக்கு இவ்வாறு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அமெரிக்காவின் பிஷொப் விமான நிலையத்தில் துப்பாக்கி மூலம் தாக்குதல் நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும், அவர் எதிர்பார்த்தது போல அமெரிக்காவில் ஒரு துப்பாக்கியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், பெரிய கத்தி ஒன்றினை வாங்கி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள