காங்கிரஸ் கட்சியை ஒழித்துவிட்டால் வறுமை தானாகவே ஒழிந்து விடும் – மோடி

காங்கிரஸ் கட்சியை ஒழித்துவிட்டால் வறுமை தானாகவே ஒழிந்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி வறுமையை அரசியல் ஆயுதம்போல் எப்பொழுதும் பயன்படுத்துகிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில், ஒடிசாவின் பலாங்கீர் மக்களவை தொகுதியின் கீழுள்ள சோன்பூர் நகரில் பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தேர்தல் பிரசார பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சியானது எப்பொழுதும் வறுமையை அரசியல் ஆயுதம்போல் பயன்படுத்துகிறது. இதன்வழியே அரசியல் பலனை அது பெறுகிறது. காங்கிரஸ் இருக்கும்வரை வறுமையை ஒழிக்க முடியாது.
காங்கிரஸ் கட்சியை ஒழித்து விட்டால் வறுமை தன்னாலேயே ஒழிந்து விடும். அக்கட்சி பல தலைமுறைகளாக வறுமையை ஒழிப்போம் என கூறி வருகிறது. ஆனால் அதனை செய்வதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஏழை மக்கள் ஏழைகளாவே உள்ளனர். அவர்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பணக்காரர்களாகி வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொ
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி