காங்கிரஸ் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சிக்கிறது – யோகி ஆதித்யநாத்

காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சி செய்கிறது என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) பிரசாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத் பேசுகையில், “தேசத் துரோகம் தொடர்பான சரத்தை நீக்குவதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயலாகும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவில் வளங்கள் மீது இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறியிருந்தார்.
இப்படிக் கூறுவதன் மூலம் இந்திய நாட்டு மக்களை அவமதிப்பு செய்தார். மக்களை இந்து மற்றும் இஸ்லாமியர் என பிரிக்க முயற்சி செய்தார். காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசியல் பற்றிப் பேசும். அவர்களை பொறுத்தவரையில் கட்சியின் வளர்ச்சிதான் முக்கியமாகும்.
இந்தியாவை பிளவுப் படுத்திய முஸ்லிம் லீக் கட்சியுடன் காங்கிரஸ் கொண்டிருக்கும் உறவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உ
-
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொ
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ