காங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் மாயம்
In இலங்கை November 29, 2020 9:18 am GMT 0 Comments 1595 by : Yuganthini

காங்கேசன்துறை கடலில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள், அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர்.
காங்கேசன்துறை, தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல்1மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தையிட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர்.
இவ்வாறு காணாமற் போயுள்ளவர்களில் ஒருவர், குடும்பத்தலைவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதுடன் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.