காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்பு
பசுபிக் கடற்பிராந்தியத்தில் காணாமல்போன ஜப்பான் போர் விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
F35 என்ற குறித்த விமானம், நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனது. அதன்பின்னர் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் விமானத்தின் பாகங்கள் பசுபிக் கடற்பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தகேஷி இவாயா இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார்.
விமானத்தில் பயணித்த 40 வயதான விமானி தொடர்பாக இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
குறித்த விமானம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பயிற்சியை ஆரம்பித்து 30 நிமிடங்களின் பின்னர் அது ரேடார் கருவியை விட்டு மறைந்தது. இந்நிலையில், விபத்து தொடர்பான காரணங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ